பேரணாம்பட்டு அருகே பாக்கெட் சாராயம் விற்ற 2 பேர் கைது

பேரணாம்பட்டு அருகே பாக்கெட் சாராயம் விற்ற 2 பேர் கைது

கோப்பு படம் 

பேரணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாக்கெட் சாராயம் விற்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மற்றும் லாலாப்பேட்டை, கள்ளிச்சேரி, கோட்டைசேரி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்த சிரஞ்சீவி (வயது 31) என்பவர் தனது வீட்டில் தலா 200 மில்லி கொண்ட 100 சாராய பாக்கெட்டுகள், கோட்டைச்சேரி கிராமத்தை சேர்ந்த காமராஜ் (30) என்பவர் தனது வீட்டில் தலா 200 மில்லி கொண்ட 75 சாராய பாக்கெட்டுகளை வைத்து விற்று கொண்டிருந்தனர்.

அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story