மளிகை கடையில் திருடிய 2 பேர் கைது

மளிகை கடையில் திருடிய 2 பேர் கைது
பைல் படம்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் வீரகனூர் அருகே நாவலூர் பகுதி மளிகை கடையில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் வீரகனூர் அருகே நாவலூர் பகுதியைச் சேர்ந்தவர் வாசன் (71). இவர் நாவலூர்- பெரம்பலூர் மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் கொண்டிருந்த போது, கடைக்கு வந்த இருவர் சிகரெட் பாக்கெட் கேட்டுள்ளனர். வாசன் கடைக்குள் சென்று சிகரெட் பாக்கெட் எடுத்து வருவதற்குள், மளிகை கடை கல்லா பெட்டியில் இருந்த ₹1500 பணத்தை எடுத்துக்கொண்டு இருவரும் ஓட்டம் பிடித்தனர்.

இதை கண்ட வாசன் சத்தம் போட்டு கொண்டே அவர்களை விரட்டினார். அப்போது அங்கிருந்தவர்கள், இருவரையும் மடக்கி பிடித்தனர். பின்னர், வீரகனூர் போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் நாவலூரைச் சேர்ந்த 14வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் கிருஷ்ணன்(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story