மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

கைது

கள்ளகுறிச்சி மாவட்டம், கீழ்குப்பம் அருகே மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கீழ்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, புக்கிரவாரியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி அலமேலு, 48; சிறுமங்கலம் நல்லதம்பி மனைவி அய்யம்மாள், 75; ஆகிய இருவரும் வெவ்வேறு பகுதியில் சாராயம் விற்றது தெரிந்தது. தொடர்ந்து, அலமேலு, அய்யம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து தலா 5 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story