சிக்கலில் லாட்டரி விற்ற 2 பேர் கைது

சிக்கலில் லாட்டரி விற்ற  2 பேர் கைது
கைது 
கீழ்வேளூர் அருகே சிக்கலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.84 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் மற்றும் கலர் பிரிண்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை முழுவதுமாக கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உதவி ஆய்வாளர் பாலமுருகன் அவர்களின் தலைமையிலான தனிப்படை நடத்திய அதிரடி சோதனையில் நாகை கீழ்வேளூர் காவல் நிலைய சரகத்திற்க்கு உட்பட்ட சிக்கல் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட சிக்கல் கண்ணையன் மகன்கள் அம்பிகாபதி (48), செந்தமிழ்நாதன் (52) ஆகிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவரிடமிருந்து தங்கம், நல்லநேரம், விஷ்ணு, குமரன், போன்ற ரூபாய் 84,300/- மதிப்புடைய லாட்டரி சீட்டுகள் மற்றும் கலர் பிரின்டர் பறிமுதல் செய்யப்பட்டது இதுபோன்ற குற்ற செயல்களில் உங்களது ஊரிலும் யாரேனும் ஈடுபட்டால் உங்கள் எஸ்பியிடம் பேசுங்கள் 8428103090 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தருபவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும். என நாகைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், கூறியுள்ளார்

Tags

Next Story