நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது!

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது!

துப்பாக்கி

வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வீரானந்தல் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் (வயது 44), கோபால் (29) ஆகிய 2 பேரும் நாட்டு துப்பாக்கிகளுடன் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சுற்றி திரிந்தனர். அப்போது ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் அவர்களை பிடித்து பாய்ச்சல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story