பெண் போலீசிடம் அத்து மீறிய 2 பேர் கைது.

பெண் போலீசிடம் அத்து மீறிய 2 பேர் கைது.
பெண் போலீசாரிடம் அத்துமீறிய நபர் கைது
பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கோட்டார் சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ஏராளமான போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வகையில் புதுக்கடை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் செட்டிகுளம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது செட்டிகுளம் கணபதி நகரை சேர்ந்த பிரதீஷ் (30), திங்கள்நகரை சேர்ந்த பிராங்கிளின் (29) ஆகிய இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பெண் போலீஸ் இருவரையும் தடுத்து நிறுத்தி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இந்த வழியாக செல்லக்கூடாது என்று கூறியுள்ளார். இதனால் பெண் போலீஸிடம் வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரிடம் அத்துமீறியதாக தெரிகிறது.

இது குறித்து பெண் போலிஸ் கோட்டாறு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அத்துமீறுதல், அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்

Tags

Next Story