தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

பைல் படம்

சேலம் தாதகாப்பட்டியில் தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 20). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும், தினேஷ்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த நபர்கள் தினேஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள் (25), மணிமாறன் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags

Next Story