வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது !

வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது !

கைது

வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டியை சேர்ந்த, முருகேசன் மகன் அருண், 24. எம். எஸ்சி., ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்த இவர், வெளிநாட்டில் சமையல் வேலைக்கு முயற்சி செய்தார். இந்நி லையில் திருச்சியை சேர்ந்த சையது, 54, கேரளா, திருவனந்தபுரத்தை சேர்ந்த அப்துல்காதர், 59, ஆகியோர், வெளி நாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் தொழில் செய்வதாக அறிமுகமாகினர். தொடர்ந்து தாய்லாந்தில் உள்ள, 'பைவ் ஸ்டார்' எனும் நட்சத்திர ஓட்டலில், 'சீப் செப்'(தலைமை சமையல்காரர்) வேலை உள்ளதாக கூறினர்.அதை நம்பிய அருண், 1.70 லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டு, இரு மாதங்களுக்கு முன் தாய்லாந்து சென்றார். ஆனால் அங்கு வேலை இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அருண், அந்நாட்டின் துாதரக உதவியுடன், சொந்த ஊர் திரும்பினார். நேற்று முன் தினம் தம்மம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதனால், சையது, அப் துல்காதரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story