கிளியனூர் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 2 பேர் கைது

கிளியனூர் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 2 பேர் கைது

காவல்துறை 

கிளியனூர் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 2 பேர் கைது.
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கிளியனூர் சந்திப்பு அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மூட்டையுடன் வந்த 2 பேரை மடக்கினர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்ட நிலையில் மற்றொருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர் வைத்திருந்த 2 மூட்டைகளை சோதனை செய்தபோது, பிளாஸ்டிக் பாட்டில்களில் 87.5 லிட்டர் சாராயம் இருந்தது. இதனை புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் புதுச் சேரி காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த சூர்யா (வயது24) என்ப தும், தப்பியோடியவர் வழுதாவூரை சேர்ந்த கணபதி (23) என்பதும் தெரியவந்தது. கடத்தலுக்கு உறுதுணையாக வழு தாவூரை சேர்ந்த ரஞ்சித், சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்த மணிமாறன் ஆகியோர் செயல்பட்டதும், சந்தைபுதுக்குப்பம் சாராய வியாபாரிசீத்தா என்கிற பரமசித்தானந்தன் என்பவர் மூலம் சாராயம் கடத்தல் நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சாராய கடத்தலில் ஈடுப்பட்ட சூர்யா மற்றும் கடத்தலுக்கு உதவிய மணிமாறன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story