ஈத்தாமொழி அருகே கஞ்சா வைத்திருந்த 2 ரவுடிகள் கைது

ஈத்தாமொழி அருகே கஞ்சா வைத்திருந்த 2 ரவுடிகள் கைது
ஈத்தாமொழியில் கஞ்சாவுடன் கைதான ரவுடிகள்
ஈத்தாமொழி அருகே கஞ்சா வைத்திருந்த 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமைதான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஈத்தாமொழி அருகே சுண்டபற்றி விளை பகுதியில் சென்றபோது ரெண்டு பேர் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர்.

மேலும் அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தனர். சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனை செய்தபோது 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நிவிசாரணையில் அவர்கள் தெற்கு சூரங்குடி கீரிவிளையை சேர்ந்த ராஜபூபதி மகன் அரவிந்த் பிரியன் (24) சுசீந்திரம் அருகே நல்லூரை சேர்ந்த செல்வகுமார் (40) என்பது தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ரெண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டு பேரும் போலீஸ் ரவுடி பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story