செஞ்சியில் 2 கூரை வீடுகள் எரிந்து சேதம்

செஞ்சியில் 2 கூரை வீடுகள் எரிந்து சேதம்

செஞ்சியில் 2 கூரை வீடுகள் எரிந்து சேதம் அடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


செஞ்சியில் 2 கூரை வீடுகள் எரிந்து சேதம் அடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா இல்லோடு கிராமம் கொசந்தாங்கல் பகுதியை சேர்ந்த வர்கள் வீடு வெங்கடேசன் மற்றும் வினோத். அருகருகே உள்ள இவர்களின் கூரைவீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.

அப்போது வெயில் சுட்டெரித்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்து வந்த செஞ்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 2 கூரை வீடுகள், அதன் உள்ளே இருந்த பீரோ, துணிமணிகள், பாத்திரங்கள், அரிசி,பருப்பு போன்ற உணவுப்பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை? இது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story