குட்கா விற்பனை - கடை உரிமையாளர்கள் கைது

குட்கா விற்பனை - கடை உரிமையாளர்கள் கைது

குட்கா விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் கைது

செய்யாறு அருகே குட்கா விற்ற பெட்டிக்கடை வியாபாரிகள் 2 பேர், கைது ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தூசி உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மாமண்டூர்,ஆக்கூர் ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலை விற்கப்படுகிறதா என சோதனை இட்டதாகவும், அப்போது மாமண்டூர், ஆக்கூர் ஆகிய கிராமங்களில்உள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்ற லட்சுமி நாராயணன், கூழமந்தல் கிராமத்தைச் சேர்ந்த உசேன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 60 பாக்கெட் குட்காவை பறிமுதல் செய்தனர். மோரணம் அனக்காவூர்,செய்யாறு போலீசார் காவல் நிலைய எல்லைக்குட்பட்டபகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு சோதனை ஈடுபட்டனர். அப்போது பெட்டிகடைகளில் ராந்தம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, சின்ன செங்காடு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், ஞான முருகன் ,பூண் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ், புளியரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி, பாராசூர் கிராமத்தைச் சேர்ந்த சம்சுதீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, 110 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story