சேலத்தில் திருட்டு போன 2 செல்போன்கள் மீட்பு !

சேலத்தில் திருட்டு போன 2 செல்போன்கள் மீட்பு !

செல்போன்கள்

சேலத்தில் திருட்டு போன 2 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளிடம் அடிக்கடி செல்போன் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன. சமீபத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த ஸ்ரீதர், கேரளாவை சேர்ந்த நிதின் தங்கப்பன் ஆகியோர் பஸ்சில் சேலம் வந்தபோது அவர்களுடைய செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

இதுதொடர்பாக அவர்கள் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் திருட்டு போன செல்போன்கள் குறித்து விசாரணை நடத்தியபோது, பயணிகளிடம் திருடிய 2 செல்போன்களை சிலர் குறைந்த விலைக்கு ஒரு கடையில் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.

பின்னர் திருட்டு போன 2 செல்போன்களை போலீசார் மீட்டனர். இதைத்தொடர்ந்து டவுன் போலீசார் ஸ்ரீதர், நிதின் தங்கப்பன் ஆகிய இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தனர்.

Tags

Next Story