+2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை முயற்சி

+2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை முயற்சி

பைல் படம் 

ஜோலார்பேட்டை அருகே +2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் மாத்திரை தற்கொலைக்கு முயன்ற மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கனம்பட்டி பகுதியைச் சார்ந்த கணேசன் கூலி தொழிலாளி. இவருடைய மகள் ஷர்மிளா (16) .அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார் மேலும் வகுப்பறையில் இவர்தான் மதிப்பெண்ணில் முதலிடம் பெற்று வந்ததாகவும் தெரிகிறது. இவருடைய மதிப்பெண் 467 இருந்தது இதனை அறிந்த ஷர்மிளா மதிப்பெண் குறைந்துவிட்டது என்று மன உளைச்சலில் மாணவி வீட்டில் இருந்த மாத்திரையை சாப்பிட்டு மயங்கி உள்ளார் .

இந்த நிலையில் இதனை அறிந்த பெற்றோர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஷர்மிளாவை கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர் மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story