மூவாட்டுகோணத்தில் மின்சாரம் தாக்கி +2 மாணவர் உயிரிழப்பு

மூவாட்டுகோணத்தில் மின்சாரம் தாக்கி +2 மாணவர் உயிரிழப்பு

இறந்த வாலிபர்

மூவாட்டுகோணம் பகுதியில் வீட்டில் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி + 2 மாணவர் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ராபி. இவரது மகன் அஸ்வின்.இவர் காட்டாதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்துவிட்டு தற்பொழுது விடுமுறையில் உள்ளார். விடுமுறையில் ஏ.சி. மெக்கானிக் வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று மூவோட்டுகோணம் பகுதியில் உள்ள வீட்டில் அஸ்வின் தனது உறவினர் ஒருவருடன் வேலைக்கு சென்றார்.அப்போது எதிர்பாராத விதமாக அஸ்வின் மீது மின்சாரம் பாய்ந்தது.தூக்கி வீசப்பட்ட அவரை சிகிச்சைக்காக சக தொழி லாளர்கள் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அஸ்வின் இறந்துவிட்டதாக கூறினார்கள்.இதுகுறித்து பளுகல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பளுகல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து அஸ்வினின்தந்தை ராபி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story