திண்டுக்கல் அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திண்டுக்கல் அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோப்பு படம் 

திண்டுக்கல் அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லை அடுத்த குட்டத்துப்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தப் போவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் , உதவி ஆய்வாளா் ஆகியோா் தலைமையிலான போலீஸாா், குட்டத்துப்பட்டி பகுதியில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, குட்டத்துப்பட்டியைச் சோந்த இ.மாரிமுத்து (44), தனது வீட்டின் அருகே 41 மூட்டைகளில் தலா 50 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. 41 ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்த போலீஸாா், மாரிமுத்துவைக் கைது செய்தனர்.

Tags

Next Story