சேலம் அருகே வாலிபரிடம் பணம் பறித்த திருநங்கைகள் 2பேர் கைது

சேலம் அருகே வாலிபரிடம் பணம் பறித்த திருநங்கைகள் 2பேர் கைது

பைல் படம்


சேலம் புதிய பேருந்து நிலையத்தில் வாலிபரிடம் பணம் பறித்த திருநங்கைகள் 2பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் பள்ளப்பட்டி சினிமா நகரை சேர்ந்தவர் முருகன் (20). இவர் நேற்றுமுன்தினம் இரவு சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரை 2 திருநங்கைகள் வழிமறித்து 800 ரூபாயை பறித்துள்ளனர். இதுபற்றி முருகன் பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முருகனிடம் பணம் பறித்தது சந்தைபேட்டையைச்சேர்ந்த திருநங்கைகளான நித்யா (19), அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ஆவாரம்பூ(19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story