கூட்டுறவு மருந்தக ஊழியருக்கு 2 ஆண்டு சிறை

கூட்டுறவு மருந்தக  ஊழியருக்கு 2 ஆண்டு சிறை
பைல் படம் 
செய்யாறு மத்திய கூட்டுறவு மருந்தகத்தில் கையாடல் செய்த மருந்தாளுனருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மத்திய கூட்டுறவு மருந்தகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு மருந்தாளுனராக காஞ்சீபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் பணியாற்றினார். துணை பதிவாளர் சரவணன் மருந்தகத்தில் கணக்கினை சரிபார்த்துள்ளார். அப்போது மருந்தாளுனர் கார்த்திக் மருந்தகத்தில் ரூ.9 லட்சத்து 95 ஆயிரத்து 811 கையாடல் செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து துணை பதிவாளர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு தெய்வீகன் தீர்ப்பு கூறினார். அதில், கையாடலில் ஈடுபட்ட கார்த்திக்கிற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Tags

Next Story