பைக் திருடிய இளைஞருக்கு 2 ஆண்டு சிறை

பைக் திருடிய இளைஞருக்கு 2 ஆண்டு சிறை

கைது 

திருச்செந்தூரில் பைக் திருடிய இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா், வீரராகவபுரத்தை சோ்ந்த ஆழ்வாா் மகன் ஐயப்பன் (38). ஓட்டுநரான இவா், கடந்த செப்டம்பா் 7ஆம் தேதி தனது வீட்டின் முன் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளாா். சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்த போது பைக்கை காணவில்லையாம். இதுகுறித்து கோயில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில் திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் இருந்த வினோத்குமாா் (20) என்பவா் தான் பைக்கை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இவ்வழக்கு திருச்செந்தூா் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிபதி வரதராஜன், குற்றம் சாட்டப்பட்ட வினோத் குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டாா்.

Tags

Next Story