பட்டியில் கட்டியிருந்த பசுமாட்டை திருடிய 2 வாலிபர்கள் கைது

பட்டியில் கட்டியிருந்த பசுமாட்டை திருடிய 2 வாலிபர்கள் கைது
பைல் படம்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளூர் சத்திரத்தில் பட்டியில் கட்டியிருந்த பசுமாட்டை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளூர் சத்திரத்தை சேர்ந்தவர் 67 வயதான சிவகாமி. இவர் தனது வாழ்வாதாரத்திற்க்காக பசுமாடுகளை வளர்த்து வருகிறார்.கடந்த 17 ந்தேதி பட்டியில் கட்டியிருந்த கால்நடைகளுக்கு தீவனங்களை வைத்து விட்டு வீட்டிற்கு சென்றார்.பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது ஒரு பசுமாட்டை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.

இதனால் அதிர்சியடைந்த சிவகாமி முசிறி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் முசிறி போலீசார் பசுமாட்டை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் பசுமாட்டை திருடிச் சென்ற வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான ராஜ்குமார், மற்றும் முசிறி அருகே அய்யம்பாளையம் குடித் தெருவைச் சேர்ந்த 31 வயதான ராஜ்குமார் என விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து முசிறி போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story