சிவகாசி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது..

சிவகாசி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது..

வழக்குப்பதிவு

சிவகாசி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

சிவகாசி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே முனீஸ்வரன் காலனியை சேர்ந்த ஜெயபாண்டி (71) என்பவர் நாரணாபுரம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த மணிகண்டன் (எ) பாட்டல் மணி (30) என்பவர் கத்தியை காட்டி முதியவர் ஜெயபாண்டியிடம் பணம் பறிக்க முயன்றுள்ளார்.இது குறித்து முதியவர் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

இதே போன்று சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி மகன் சந்திரசேகர் (36).இவர் சிவகாசி-விருதுநகர் மெயின் ரோட்டில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த வடமலாபுரத்தை சேர்ந்த கார்த்திகை செல்வம் (எ) கார்த்திக் (36) என்பவர் கூலி தொழிலாளி சந்திரசேகரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது.அப்போது சந்திரசேகர் சத்தம் போட்டதால் அங்கிருந்து கார்த்திக் தப்பி ஓடிவிட்டார்.இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

Tags

Next Story