20 வளர்ச்சி திட்ட பணிகளுக்கு சுமார் 1013 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை அமைச்சர்கள் துவக்கி வைப்பு

20 வளர்ச்சி திட்ட பணிகளுக்கு சுமார் 1013 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை அமைச்சர்கள் துவக்கி வைப்பு
20 வளர்ச்சி திட்ட பணிகளுக்கு சுமார் 1013 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை அமைச்சர்கள் துவக்கி வைப்பு
20 வளர்ச்சி திட்ட பணிகளுக்கு சுமார் 1013 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை அமைச்சர்கள் துவக்கி வைப்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலநூல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு 1013 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜைக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவருமான இல.பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் பட்டத்தி பாளையம் பகுதியில் 19 லட்சம் மதிப்பீட்டிலும், கருப்பன் வலசு பகுதியில் 30 லட்சம் மதிப்பீட்டிலும், மணலூர் பகுதியில் 297 லட்சம் மதிப்பீட்டிலும், கந்தசாமி பாளையம் பகுதியில் 25 லட்சம் மதிப்பீட்டிலும், ஆயிகவுண்டன் பாளையம் 42 லட்சம் மதிப்பீட்டிலும், மாலமேடு பகுதியில் 39 லட்சம் மதிப்பீட்டிலும், லட்சுமி நகர் பகுதியில் 35 லட்சம் மதிப்பீட்டிலும்,போளாரை பகுதியில் 525 லட்சம் மதிப்பீட்டிலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளான மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் திறப்பு விழா, ஆரம்ப துணை சுகாதார நிலையம் திறப்பு விழா, தார் சாலை அமைத்தல், பழுதடைந்த தார் சாலை புதிய தார் சாலையாக புதுப்பித்தல், பேருந்து நிறுத்தம் அமைக்கவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜையும், சிறுவர் பூங்காவும் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தப் பணியினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு வழக்கு செலுத்த பணிகளுக்கு பூமி பூஜையை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுமதி கார்த்திக், மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவரும் மூலனூர் கிழக்கு ஒன்றிய செயலாளருமான பழனிச்சாமி, மூலனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் சுரேஷ், கன்னிவாடி பேரூராட்சி தலைவர் ரேவதி சுரேஷ், மூலனூர் பேரூராட்சி தலைவரும் மூலனூர் பேரூர் கழக செயலாளருமான மக்கள் தண்டபாணி மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் பூமி பூஜையில் கலந்து கொண்டனர்.
Next Story