சங்கரன்கோவிலில் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சங்கரன்கோவிலில் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் சாலையில் உள்ள கடைகளில், நகராட்சி ஆணையர் சபாநாயகம் ஆலோசனை பேரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் தலைமையில் அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில், 20 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளில் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஏராளமான நகராட்சி அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story