வெறி நாய் கடித்ததில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதி !
![வெறி நாய் கடித்ததில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதி ! வெறி நாய் கடித்ததில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதி !](https://king24x7.com/h-upload/2024/06/11/545395-public-demand.webp)
பொதுமக்கள் கோரிக்கை
நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பதாலும், நாய்களால் விபத்துகள் ஏற்படுவதாலும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த சுமார் 20க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பதாலும், நாய்களால் விபத்துகள் ஏற்படுவதாலும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story