நாகர்கோவிலில் வீடுகளில் புகுந்து நகைகள் கொள்ளை - மர்மநபர்கள் கைவரிசை !

நாகர்கோவிலில் வீடுகளில் புகுந்து  நகைகள் கொள்ளை - மர்மநபர்கள் கைவரிசை !

 கொள்ளை

நாகர்கோவிலில் வீடுகளில் புகுந்து 20 பவுன் நகை கொள்ளை. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
குமரி மாவட்டம் நாகர்கோவில், வடிவீஸ்வரம் அழகம்மை கார்டன் பகுதியில் 2 வீடுகளில் திருட்டு நடந்தது. அதே பகுதியை சேர்ந்த சிந்து (29) . இவரது கணவர் இறந்து விட்டார். இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தாயார் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று வீட்டிற்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் இருந்த பீரோவில் இருந்து 5 பவுன் நகை ரூபாய் 10 ஆயிரம் பணத்தை திருடி சென்றிருந்தனர். இது குறித்து சிந்து கோட்டார் போலீசில் புகார் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர். இந்த நிலையில் மேலும் ஒரு வீட்டில் நகை பணம் திருடப்பட்டுள்ளது. அதே பகுதி கணேசன் (65)என்பவர் கேரளாவில் உள்ளார். கணேசன் இரண்டு வாரங்களும் முன்பு மகன் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று காலையில் இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அவரது பீரோவில் இருந்து 15 பவன் நகையை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் நாகர்கோவிலில் கடந்த இரண்டு நாட்களாக 4 வீடுகளில், ஒரு கோவிலில் தொடர் கொள்ளை நடந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story