லாரியின் பாரம் தாங்காமல் 20 ஆண்டு பழமையான பாலம் இடிந்து சேதம்

லாரியின் பாரம் தாங்காமல் 20 ஆண்டு பழமையான பாலம் இடிந்து சேதம்

அன்னப்பன்பேட்டையில், லாரியின் பாரம் தாங்காமல் 20 ஆண்டு பழமையான பாலம் இடிந்து சேதம் அடைந்துள்ளது.


அன்னப்பன்பேட்டையில், லாரியின் பாரம் தாங்காமல் 20 ஆண்டு பழமையான பாலம் இடிந்து சேதம் அடைந்துள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ள அன்னப்பன்பேட்டையில், ஏ - பிரிவு பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த பாசன வாய்காலில் அமைந்துள்ள பாலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இப்பாலத்தினை வழியே சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களுக்கு விவசாயிகள் நடவு, அறுவடை இயந்திரம், டிராக்டர் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். பாலம் கட்டப்பட்டு 20 ஆண்டுகள் கடந்த நிலையில், பாலம் பழுதடைந்து வலுவிழந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைத்து தர வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை மூங்கில் ஏற்றிக் கொண்டு பாலத்தின் வழியாக வந்த லாரியின் பாரம் தாங்காமல் பாலம் இடிந்து உள்வாங்கியது. இதில், லாரி பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியது. பாலத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பாலம் வலுவிழந்த நிலையில் இருப்பதாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதின் விளைவு தான் பாலம் உடைந்து போனது. இதனால், விவசாய பணிகளுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகி நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். அறுவடையாகும் நெல்லை எப்படி விற்பனைக்கு கொண்டு வருவது என தெரியவில்லை. எனவே அதிகாரிகள் உடனடியாக, ஆய்வு செய்து புதிய பாலம் கட்டித்தர வேண்டும்" இவ்வாறு தெரிவித்தனர்.

Tags

Next Story