2ஆயிரம் வாக்காளர்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

2ஆயிரம் வாக்காளர்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

மயிலாடுதுறை அருகே சீர்காழி கீழ் மூவர்க்கரையில்அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.


மயிலாடுதுறை அருகே சீர்காழி கீழ் மூவர்க்கரையில்அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழ மூவக்கரை மீனவர் கிராமம் உள்ளது இங்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட கீழமூவர்க்கரை மீனவர் கிராமத்தில் அடிப்படை வசதிகளான ரேஷன் கடை, சமுதாயக்கூடம், மீன் ஏல கூடம்,மீன் வலை பின்னும் கூடம் உள்ளிட்ட பல்வேறு அடி படை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை எனவும் கடலில் தூண்டில் வளைவு அமைத்துத் தர வலியுறுத்தியும் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு முறையும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க மட்டுமே வருவதாகவும் வெற்றி பெற்ற பின்பு கிராமத்தை திரும்பி கூட பார்ப்பதில்லை என குற்றம் சாட்டி வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர் அடித்து சுற்றுவட்டார கிராமங்களில் ஓட்டி உள்ளனர்.

தங்களது கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அதில் முதல் கட்டமாக மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கடலில் இறங்கி கையில் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து தங்களது ரேஷன் கார்டு ஆதார் கார்டுஉள்ளிட்டவைகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தொடர்ந்து வரும் பாராளுமன்றம்,சட்டமன்ற,உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கத்து அனைவரும் வாக்களிக்காமல் தங்களது வீட்டிலேயே இருக்கப் போவதாகவும் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன் மக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டார் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி திமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கிராமத்திற்கு வரக்கூடாது என மீனவ கிராம மக்கள் திரும்பி போ போ என விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் குவிக்கப்பட்டுள்ளது பதற்றமான சூழல் நிலவி வருகிறது மேலும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்

Tags

Next Story