201 ஊராட்சிகளில் ஆக.15}இல் கிராம சபைக் கூட்டம்

X
அரியலூர்,ஆக.13- சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம்,கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதிசெய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம் மற்றும் இதர பொருள்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது. எனவே, இக்கூட்டத்தில்,அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Next Story

