திற்பரப்பில் ரூ.20.21 கோடியில் குடிநீர் திட்டப்பணி

திற்பரப்பில் ரூ.20.21 கோடியில் குடிநீர் திட்டப்பணி
குடிநீர் வினியோக பணியை துவக்கிய அமைச்சர்
திற்பரப்பில் ரூ.20.21 கோடியில் குடிநீர் திட்டப்பணியை அமைச்சர் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட பிணந்தோடு காலனி பகுதியில் அம்ரூத்-2.0 திட்டத்தின் கீழ் ரூ.20.21 கோடி மதிப்பில் புதிய குடிநீர் விநியோக நிகழ்ச்சி மற்றும் பிணந்தோடு பகுதியில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட நலவாழ்வு மையம் மற்றும் அரசு துணை சுகாதார நிலைய திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார். நடைபெற்ற நிகழ்ச்சிகளில் உதவி இயக்குநர் பேரூராட்சிகள் விஜயலெட்சுமி, அரசு வழக்கறிஞர் ஜாண்சன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story