2024ம் ஆண்டிற்கான ஆட்டிசம் டவுன் செண்ட்ரோம் உள்ள குழந்தைகளுக்கான தொடர் விளையாட்டு போட்டி

2024ம் ஆண்டிற்கான ஆட்டிசம் டவுன் செண்ட்ரோம் உள்ள குழந்தைகளுக்கான தொடர் விளையாட்டு போட்டி
ப்ளோரன்ஸ் டிரஸ்ட் சார்பாக மதுரையில் நடைபெற்றது
மதுரை ராம்நகர் பகுதியில் உள்ள உள் விளையாட்டரங்கில் ப்ளோரன்ஸ் டிரஸ்ட் சார்பாக 2024 ஆம் ஆண்டிற்கான ஆகாபே கால்பந்து தொடர் ஆட்டிசம்/டவுன் சிண்ட்ரோம் உள்ள குழந்தைகளுக்காக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 6 பள்ளிகளில் இருந்து குழந்தைகள் கலந்து கொண்டனர். இதனை நீதிபதி வி.பவானி சுப்பராயன் மற்றும் நீதிபதி பி.புகழேந்தி ஆகியோர் சிறப்பித்து நடத்தினர். மேலும், வழக்கறிஞர் பொதுமக்கள், வீரகதிரவன் மற்றும் இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநில தலைவர் கே. சாமிதுரை, சமூக ஆர்வலர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story