211 கிலோ குட்கா பறிமுதல்

211 கிலோ குட்கா பறிமுதல்

காவல்துறை விசாரணை


கீழ்குப்பம் அருகே விபத்துக்குள்ளான காரில் இருந்த 211 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், மேல்பூரிகன் கிராமத்தைச் சேர்ந்தவர் இடும்பன் மகன் முருகன், 27; இவர் மகேந்திரா பிக் அப் லோடு வாகனத்தில் வி.கூட்ரோடு வழியாக தருமபுரிக்கு சென்றார். நேற்று அதிகாலை 4:00 மணியளவில், கள்ளக்குறிச்சி மாவட்டம், செம்பாக்குறிச்சி வனப்பகுதி அருகே சென்ற போது, எதிரே வந்த வோக்ஸ் வேகன் கார், வேல்முருகன் ஓட்டி வந்த லோடு வாகனத்தின் மீது மோதியது. இதில், காரை ஓட்டி வந்த சேலம் மாவட்டம், காரைக்கலத்தைச் சேர்ந்த அங்கமுத்து மகன் வேல்முருகன், 37; லேசான காயமடைந்தார். உடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்த கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதில், விபத்துக்குள்ளான காரில், 1 லட்சத்து 69 ஆயிரத்து 712 ரூபாய் மதிப்பிலான 211 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது. கார் மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story