ஜுன் 21 ஆம்‌ தனியார் துறை‌ வேலைவாய்ப்பு முகாம்

ஜுன் 21 ஆம்‌ தனியார் துறை‌ வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர்

சிவகங்கையில் ஜுன் 21 ஆம்‌ தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜுன் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

Tags

Next Story