குமரியில் 22 கோடி பெண்கள் இலவச பேருந்து பயணம்

தமிழக முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யலாம் என ஆணைப்பிறப்பித்ததன் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராணித்தோட்டம் – II, ராணித்தோட்டம் – III, செட்டிகுளம், கன்னியாகுமரி, விவேகானந்தபுரம், குழித்துறை I, குழித்துறை II, திருவட்டார், திங்கள் நகர், மார்த்தாண்டம், குளச்சல் ஆகிய 11 பணிமனைகளிலிருந்து பல்வேறு வழிதடங்களில் தினந்தோறும் மொத்தம் 319 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நகர பேருந்துகள் அனைத்திலும் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மூன்று ஆண்டு காலகட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் சுமார் 22.6 கோடி பெண்களும், 1,83,197 திருநங்கைகளும், 13,34,006 மாற்றுத்திறனாளிகளும் பயன் பெற்றுள்ளார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
