பொறியியல் கல்லூரியில் 23 -வது ஆண்டு விழா மற்றும் பாராட்டு விழா

பொறியியல் கல்லூரியில் 23 -வது ஆண்டு  விழா மற்றும் பாராட்டு விழா

பாராட்டு விழா

கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 23 வது ஆண்டு விழா மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 23 வது ஆண்டு விழா மற்றும் பாராட்டு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் சதீஷ் முத்துக்கிருஷ்ணன் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முன்னதாக கல்லூரி மாணவ மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் அண்ணாமலை ரகுபதி, கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இயக்குனர் முனைவர் மீனாட்சி அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story