24 x 7 வீதம் குடிநீர் வழங்கும் திட்டம் .. 6 வார்டுகளில் சோதனை முயற்சி ..

24 x 7 வீதம் குடிநீர் வழங்கும் திட்டம் .. 6 வார்டுகளில் சோதனை முயற்சி ..

மாமன்ற கூட்டம் 

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணி தலைமையில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு மாநகராட்சிக்கு புதியதாக ஆணையராக நியமிக்கப்பட்ட சிவகிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார். புதிதாக பதவி ஏற்றுள்ள சிவகிருஷ்ணமூர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். வார்டுகளில் தெரு நாய்கள் அதிகரிப்பு , குடிநீர் பிரச்சினை, சாலை வசதி உள்பட பல்வேறு வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.ஈரோடு மாநகராட்சி 60 வார்களிலும் 24 x 7 என்ற முறையில் குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் , சோதனை முறையில் 6 வார்டுகளில் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

Tags

Next Story