தாளவாடியில் வீசிய சூறாவளிக் காற்றில் 25 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

தாளவாடியில் வீசிய சூறாவளிக் காற்றில் 25 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

சேதமடைந்த வாழைமரம்

தாளவாடியில் வீசிய சூறாவளிக் காற்றில் 25 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் அடைந்தது.

தாளவாடியில் வீசிய சூறாவளிக் காற்றில் 25 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் தாளவாடியில் கடந்த இரு நாட்களாக வீசிய சூறாவளிக் காற்றில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சேதமடைந்தன. ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

சூறாவளிக்காற்றின் காரணமாக, தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந் துள்ளன.இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை வீசிய பலத்த காற்றில் தாளவாடியை அடுத்த திகினாரை, கரளவாடி, சூசைபுரம்,தொட்டமுதிகரை, பனஹள்ளி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமாகின.

சேதமடைந்த வாழை மரங்கள் குறித்து தோட்டக்கலைத் துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திகினாரை கிராமத்தில் பலத்த காற்று வீசியதில், ஒரு வீட்டின் மேற்கூரை மற்றும் பைனாபுரம் அனுமன் கோயில் சேதமடைந்தது.சேதமடைந்த வாழை மரங்கள் மற்றும் வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story