வெளிமாநில மதுபாட்டில்கள் 2500பறிமுதல்

வெளிமாநில மதுபாட்டில்கள் 2500பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்


தமிழகத்திற்கு காரில் கடத்தி செல்லப்பட்ட கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் 2500 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் தமிழக காவல்துறையினர் மற்றும் ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஓசூர் நோக்கி வந்த ஒரு காரை போலீசார் மடக்கி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் 25 பெட்டிகளில் தடை செய்யப்பட்ட கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கீழ் முருங்கை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பெங்களூரில் இருந்து திருப்பத்தூர் பகுதிக்கு இந்த மதுபான பாக்கெட்டுகளை காரில் கடத்தி கொண்டு சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கார்த்திகேயனை கைது செய்து காரில் இருந்து 2500 கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகளையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story