பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கையில் 2.58 கோடி ரூபாய் காணிக்கை

பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கையில் 2.58 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.2.58 கோடி கிடைத்தது. இக்கோயிலில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. பக்தர்கள் காணிக்கையாக 1.383 கிலோ தங்கம், 12.992 கிலோ வெள்ளி, ரூ. 2 கோடி 58 லட்சத்து 37ஆயிரத்து 372ம், 406 வெளிநாட்டு கரன்சிகள் செலுத்தியிருந்தனர். கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து தலைமையில் அலுவலர்கள், கல்லுாரி மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story