26 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்து சிறையில் அடைப்பு.

கைது
தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் கீழ் செயல்படும் போதை தடுப்பு சிறப்பு காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினரால் வெளி மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு மூன்று நபர்களை கைது செய்தனர். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வெளி மாநிலத்திலிருந்து 26 கிலோ கஞ்சா அனுப்பிய நபரை போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு தேடி வந்த நிலையில் ஒடிசா மாநிலம் கொராபுட் மாவட்டம் ஜெயபூர் பகுதியைச் சேர்ந்த சுராஜ் சிங் என்ற இளைஞரை கைது செய்து தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கடந்த பத்து மாதங்களில் வெளிமாநிலத்திலிருந்து மொத்தமாக கஞ்சாவை அனுப்பி விற்பனை செய்து வந்த வழக்கில் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story