சபரிமலைக்கு 26ம் ஆண்டு புனித யாத்திரை

ராசிபுரத்தில் பக்தர்கள் சங்கம் சார்பில் 26ம் ஆண்டு சபரிமலை புனித யாத்திரையை பக்தர்கள் மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் மேட்டுத்தெரு ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் ராஜகுரு ஆர்.வி.ராமமூர்த்தி (62 ஆண்டுகள்) அவர்களின் ஆசியுடன் குருசாமி பாலு தலைமையில் தினேஷ்சாமி, லோகேஷ்சாமி, தமிழநம்பி சாமி,விக்னேஷ் சாமி,வாஞ்சிநாதன் சாமி,நிர்மல்குமார் சாமி,கலைசாமி,கன்னிசாமிகள் பாலகிருஷ்ணன்சாமி, லஷ்மிகாந்த்சாமி, ஆதிசாமி,தர்சன்சாமி ஆகிய சாமிகள் 26ம் ஆண்டு சபரிமலை புனித யாத்திரையை மேற்கொண்டார்கள். முன்னதாக ராசிபுரம் ஸ்ரீதேவி பூதேவி சபையில பொன் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி மற்றும் உற்சவர் ஐயப்பன் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்து பஜனை பாடல்கள் பாடி இருமுடி கட்டி ஐயப்ப கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் இருந்து மூத்த குருசாமி. மணிசாமி அவர்கள் அனைவரையும் வழி அனுப்பி வைத்தார்கள்.

Tags

Next Story