ரூ.27½ லட்சம் உணவு பொருட்கள் வாங்கி மோசடி

ரூ.27½ லட்சம் உணவு பொருட்கள் வாங்கி மோசடி

வழக்குப்பதிவு

ரூ.27½ லட்சம் உணவு பொருட்கள் வாங்கி மோசடி. தந்தை, மகன் உள்பட 4 பேர் மீது வழக்கு.
சேலம் நெத்திமேடு சங்ககிரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் அப்பகுதியில் மைதா, கோதுமை, சர்க்கரை, ரவை உள்ளிட்ட உணவு பொருட்களை மொத்த விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த தந்தை, மகன் உள்பட 4 பேர் ஓட்டல் நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.27 லட்சத்து 66 ஆயிரத்திற்கு எனது நிறுவனத்தில் இருந்து உணவு பொருட்கள் வாங்கினர். ஆனால் அதற்கான பணத்தை அவர்கள் தராமல் மோசடி செய்துவிட்டனர். எனவே அவர்கள் 4 பேர் மீது நடவடிக்கை எடுத்து உணவு பொருட்களுக்கான பணத்தை திரும்ப பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தந்தை, மகன் உள்பட 4 பேர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags

Next Story