ஜமாபந்தியில் 2,731 மனுக்கள் பெறப்பட்டன

ஜமாபந்தியில் 2,731 மனுக்கள் பெறப்பட்டன

ஜமாபந்தியில் 2,731 மனுக்கள் பெறப்பட்டன

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் நடைபெற்று முடிந்துள்ள வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்வுகளில் 2,731 மனுக்கள் பெறப்பட்டு, 848 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது .

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய நான்கு வட்டங்களிலும் 1433-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி ஜூன் 27 ஆம் தேதி நடைபெற்றது. இதில் குன்னம் வட்டத்திற்கான வருவாயத்தீர்வாயம் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் கற்பகம், தலைமையில் குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், காடூர் கொளப்பாடி, வரகூர், குன்னம், பெரியம்மாபாளையம், பெரியவெண்மனி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். பின்னர், இலவச வீட்டுமனைப் பட்டா, இயற்கை மரண உதவித்தொகை, பட்டா மாறுதல், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு 36 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதலுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் பாரதிவளவன், வட்டாட்சியர் கோவிந்தம்மாள் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். இதேபோல வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தவடிவேல்பிரபு தலைமையிலும் . ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் கோகுல், தலைமையிலும், வருவாய்த்தீர்வாயம் ஜமாபந்தி நடைபெற்றது இதில் குன்னம் வட்டத்தில் 183 மனுக்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 119 மனுக்களும், ஆலத்தூர் வட்டத்தில் 24 மனுக்களும், என மொத்தம் 326 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களிலும்ஜூன் 18, 20, 21, 25 , 26 மற்றும் 27 ஆகிய தேதியில் 6 நாட்கள் நடைபெற்று முடிந்த வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தியில் மொத்தம் 2,731 மனுக்கள் பெறப்பட்டு, 848 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story