281 மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா

குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பங்கேற்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி. மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 281 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார், திமுக தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் சின்னையன், பள்ளி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story