செஞ்சியில் 28-ந்தேதி தி.மு.க. செயற்குழு கூட்டம் !!

செஞ்சியில் 28-ந்தேதி தி.மு.க. செயற்குழு கூட்டம் !!

செஞ்சி மஸ்தான்

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் வருகிற 3-ந் தேதி நடைபெறும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், ஆரணி மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கையின் போது கட்சி முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.

எனவே இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேருர் செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story