ராசிபுரத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி முகாம்

ராசிபுரத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி முகாம்

ஆட்சியர் அறிவுரை

ராசிபுரத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், எஸ்.ஆர்.வி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 359 வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள், 347 வாக்குச்சாவடி அலுவலர்கள்-1, 244 வாக்குச்சாவடி அலுவலர்கள்-2, 424 வாக்குச்சாவடி அலுவலர்கள்-3 என மொத்தம் 1,374 அலுவலர்கள் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தல் 2024-ஐ சிறப்பாகவும், அமைதியாகவும், பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி வாக்களிக்க,

ஏதுவாக வாக்குச்சாவடி மையங்களில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் உமா அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் த.முத்துராமலிங்கம் இராசிபுரம் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story