விழுப்புரம் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

விழுப்புரம் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள்

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்தது கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமையிலான, சேர்க்கை குழுவினர், காலை 9:00 மணிக்கு தொடங்கி கலந்தாய்வை நடத்தினர். சுழற்சி-1 பிரிவில் 1,000 பேரும், சுழற்சி-2 பிரிவில் 700 மாணவர்களும் பங்கேற்றனர்.

இதில், 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டது.தொடர்ந்து, 25ம் தேதி பி.ஏ., வரலாறு, பொருளியல் பிரிவுக்கும், 26ம் தேதி பி.காம்., - பி.ஏ., தொழில் பிரிவு மாணவர்களுக்கும், 27ம் தேதி பிற்பட்டோர், முஸ்லிம்,

அருந்ததியர், மலைவாழ் பிரிவு மாணவர்களுக்கான அனைத்து பாட பிரிவுகளுக்கும், 28ம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம் பாட பிரிவுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

Tags

Next Story