திருப்பூர் மாநகராட்சியின் 2வது மண்டல கூட்டம்

திருப்பூர் மாநகராட்சியின் 2-வது மண்டல கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சி,2-வது மண்டல அலுவலகத்தில், மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சியின் 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வார்டு வாரியாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 2-வது மண்டலத்திற்குட்பட்ட வார்டு கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் உள்ள கோரிக்கைகளை பற்றி பேசினர்.மேலும் இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் , துணை மேயர் பாலசுப்ரமணியம் , 2- வது மண்டல தலைவர் கோவிந்தராஜ் , மாமன்ற உறுப்பினர்களும் மற்றும் மாநகராட்சி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story