3 ஆம் நாள் வருவாய் தீர்வாயம்:36 மனுக்களுக்கு உடனடி தீர்வு

3 ஆம் நாள் வருவாய் தீர்வாயம்:36 மனுக்களுக்கு உடனடி தீர்வு
X
3 ஆம் நாள் வருவாய் தீர்வாயம்:36 மனுக்களுக்கு உடனடி தீர்வு. காணப்பட்டது.
அரியலூர்,மே 23 - அரியலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியின் 3 ஆவது நாளா வியாழக்கிழமை 36 மனுக்களுக்கு தீர்வுக் காணப்பட்டது. கீழப்பழுவூர் உள்வட்டத்துக்காக நடைபெற்ற இந்த வருவாய் தீர்வாயத்துக்கு, மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, 16 வருவாய் கிராம பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், சிட்டா நகல், உட்பிரிவு, நத்தம் மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 264 மனுக்களைப் பெற்றார். பின்னர், அவர் அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, அதில் 36 மனுக்களுக்கு தீர்வுக் கண்டு, பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் , இ}பட்டா, புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் ஆகியவற்றிற்கான ஆணைகளை வழங்கினார்.இதில் 220 மனுக்கள் விசாரணையிலும், 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரக மேலாளர்(பொது) குமரையா, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, தனி வட்டாட்சியர் (அரசு கேபிள் டிவி) கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். :
Next Story