கஞ்சா கடத்திய 3 பேர் கைது

கஞ்சா கடத்திய 3 பேர் கைது

கூடலூர் அருகே நாடுகாணி சோதனை சாவடியில் அத்துமீறி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர் அருகே நாடுகாணி சோதனை சாவடியில் அத்துமீறி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரியை ஒட்டியுள்ள கேரள, கர்நாடக மாநிலத்தில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள் கடத்தி வருவது கடந்த சில நாட்களாக தொடர்ந்து வருகிறது. இதையடுத்து காவல்துறையினர் கேரளா மற்றும் கர்நாடக எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் நாள்தோறும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கூடலூர் அருகே நாடுகாணி சோதனை சாவடியில் வழக்கம் போல் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது கேரள பதிவு எண் கொண்ட வாகனங்களை சோதனை செய்தனர் அதில் அரசால் தடை செய்யப்பட்ட (MDMA) மற்றும் 40 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்ததை கைப்பற்றினர். இந்த போதை வஸ்துகளை கொண்டு வந்த கேரள மாநிலம் கண்ணணூரைச் சேர்ந்த செமீர் (25) ஜிபின் (26) ராதாகிருஷ்ணன்(29) ஆகிய மூன்று பேரை தேவாலா போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story