மயிலாடுதுறை : சாலையோர குப்பையை தின்ற 3 பசுமாடுகள் உயிரிழப்பு

மயிலாடுதுறை : சாலையோர குப்பையை தின்ற 3 பசுமாடுகள் உயிரிழப்பு

சீர்காழியில் சாலையோர குப்பையை தின்ற 3 பசுமாடுகள் உயிரிழப்பு

சீர்காழியில் சாலை ஓரம் கொட்டி கிடந்த குப்பையை தின்று 3 மாடுகள் உயிரிழப்பு மேலும் ஒரு மாட்டுக்கு தீவிர சிகிச்சை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருகோலக்கா தெருவை சேர்ந்த மல்லிகா, என்பவருக்கு சொந்தமான மூன்று மாடுகள், காலையில் வழக்கம்போல மேச்சலுக்கு சென்றுள்ளன, மேய்ச்சலுக்கு நகராட்சியை சுற்றியுள்ள பகுதியில் உள்ள சாலைகளில் கிடக்கும் குப்பைகளை மேய்வதூ வழக்கம், இந்த நிலையில் சீர்காழி சன்னதி தெருவின் அருகே, கொட்டப்பட்டு இருந்த குப்பையைமேய்ந்த மாடுகள், சிறிது நேரத்தில் அடுத்தடுத்து சரிந்து கீழே சாய்ந்தன ,வாயில் நுரை தள்ளியும், கால்கள் வெட்டி வெட்டி இழுத்து துடி துடித்து ,சம்பவ இடத்திலேயே மூன்று மாடுகள் உயிரிழந்தன, இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ,அருகில் இருந்த கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மேலும் ஒரு மாட்டுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றும் முயற்சி ஈடுபட்டனர். சாலையோரம் கிடந்த குப்பையைத் தின்று, அடுத்தடுத்து மூன்று மாடுகள், உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Tags

Next Story